search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர் தற்கொலை"

    கடலூர் மாவட்டத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, 2½ வயது குழந்தையை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ParentsSuicide #ChildMurder
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இடைசெருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா (25). இவர்களுக்கு பிரதிஷா (2½) என்ற பெண் குழந்தை இருந்தது. பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.

    பிரகாசுக்கும் அவரது மனைவி உஷாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ராஜ்கோட்டில் இருந்து சொந்த கிராமமான இடைசெருவாய்க்கு வந்தார். நேற்று மாலை கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து இரவில் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் உஷா திடீரென கண்விழித்தார். அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறதே என நினைத்து அழுதார். பின்னர் உஷா வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    திடீரென்று எழுந்த பிரகாஷ், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு உஷா தற்கொலை செய்து கொண்டாரே என எண்ணி கதறி அழுதார். பின்னர் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி முதலில் தூங்கிக்கொண்டிருந்த மகள் பிரதிஷாவின் கையில் கத்தியால் அறுத்தார். ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் குழந்தை பிரதிஷா பரிதாபமாக இறந்தது. பின்னர் தனது கையையும் பிரகாஷ் கத்தியால் அறுத்தார். அவரது கையில் இருந்து ரத்தம் ஆறாக ஓடியது. சிறிது நேரத்தில் பிரகாசும் இறந்தார்.

    இன்று காலை வெகு நேரமாகியும் பிரகாசின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உஷா தூக்கில் தொங்கியவாறும், பிரகாஷ், குழந்தை பிரதிஷா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து திட்டக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து பிரகாஷ், உஷா மற்றும் குழந்தை பிரதிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் எதற்காக குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசாருக்கு முழுமையாக தகவல் கிடைக்கவில்லை.

    தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #ParentsSuicide #ChildMurder

    மகள் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள சக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அகத்தூர்சாமி (63), விவசாயி. இவரது மனைவி சொர்ணலதா(50).இவர்களுக்கு சினேகா(23) என்ற மகள் உள்ளார். என்ஜினீயரிங் படித்து முடித்த சினேகா பெற்றோர் எதிர்ப்பை மீறி ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    ஒரே மகளும் தங்களது பேச்சை கேட்கவில்லையே என அகத்தூர் சாமியும், சொர்ணலதாவும் மனம் உடைந்து காணப்பட்டனர்.

    நேற்று மாலை வீட்டில் இருவரும் வி‌ஷம் குடித்தனர். பின்னர் அங்கலக்குறிச்சியில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து தாங்கள் வி‌ஷம் குடித்த தகவலை தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொள்ளாச்சிக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் இருவரும் மயங்கி கிடந்தனர்.

    இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அகத்தூர் சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொர்ணலதா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா மேற்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

    அரசு வேலை வாங்கி தருவதாக இளைஞர்கள் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த மகனால் பெற்றோர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் பாபு (வயது 45). கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் பலரிடம், தனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அதனை நம்பி, இளைஞர்கள் பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் பாபு பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள், பொதுமக்கள் பலர் தங்களுக்குரிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பாபு, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அரசு வேலைக்காக பணம் கொடுத்தவர்கள், தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் அவர் தலைமறைவானது தெரிய வந்தது.

    இதனிடையே பணத்தை கொடுத்து ஏமாந்த பலர், பாபுவின் பெற்றோர் கஸ்தூரி (வயது 60), கவுசல்யா (55) ஆகியோரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர். தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவர்கள் மனமுடைந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கஸ்தூரி, கவுசல்யா இருவரும் தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாபுவிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண மோசடி செய்து தலைமறைவான பாபுவுக்கு ஷோபா என்ற மனைவி உள்ளார். தன்வந்த் என்ற 4 வயது மகனும் இருந்தான். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த போது, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வாங்கல் ஆற்றுப்பாலத்தில் மனைவி மற்றும் மகனுடன் சென்ற பாபு, அங்கு பாலத்தின் கைப்பிடி சுவர் அருகே மகனை தூக்கி வைத்து கொண்டு செல்போனில் செல்பி எடுத்தபோது, தன்வந்த் தவறி ஆற்றுக்குள் விழுந்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் பண மோசடி விவகாரத்தால் பாபுவின் பெற்றோர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான பாபு எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ஓட்டப்பிடாரம் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் விரக்தியடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் பத்மநாபன் (வயது 58). இவருடைய மனைவி சண்முகலட்சுமி (48). இவர்கள் அதே பகுதியில் தூத்துக்குடி- மதுரை சாலையில் ஓட்டல் நடத்தி வந்தனர். இவர்களுக்கு மணிகண்டன் (24) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தற்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த 26-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பத்மநாபனும், சண்முகலட்சுமியும் விஷம் குடித்து விட்டு மணிகண்டனுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் பதறி போன மணிகண்டன் உடனே வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டில் தாயும், தந்தையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் பத்மநாபனும், மதியம் சண்முகலட்சுமியும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலா விசாரணை நடத்தினார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

    மணிகண்டன் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். அதே பஸ்சில் கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (24) என்ற பெண்ணும் சென்று வந்தார். மாரியம்மாள் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்தார்.

    ஒரே பஸ்சில் தினமும் சென்றதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றதால் காதலுக்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆனாலும் இருவரும் காதலில் பின்வாங்கவில்லை. மாறாக, ஒரு வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று மாரியம்மாளிடம், மணிகண்டன் கூறி இருந்ததாக தெரிகிறது. அதன்படி அவருக்கு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. உடனே திருமணத்துக்கு தயார் ஆனார். அவரது திருமணத்துக்கு மணிகண்டனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    தங்களுக்கு ஒரே மகனாக நீ இருப்பதால், உனது திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்று கூறி வந்துள்ளனர். ஆனாலும் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதில் மணிகண்டன் உறுதியாக இருந்தார். அதன்படி கடந்த 25-ந் தேதி மாரியம்மாளை ஒரு கோவிலில் வைத்து மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். தங்களது சொல் பேச்சை மகன் கேட்கவில்லையே என்று விரக்தியடைந்த பத்மநாபனும், சண்முகலட்சுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் பெற்றோரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் மகனின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பதி உயிரை விட்ட சம்பவம் எப்போதும் வென்றான் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    அவினாசி அருகே விபத்தில் ஒரே மகனை பறிகொடுத்ததால் தாய் - தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    அவினாசி:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை ஈகாட்டூர் எலந்த குட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவரது மகன் நிஷாந்த் (22). டிப்ளமோ கம்ப்யூட்டர் முடித்துள்ளார். இவரது நண்பர் கிருபாகரன் (20). ஊட்டி பைக்காரா மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்.

    நிஷாந்தும், கிருபாகரனும் நேற்று மோட்டார் சைக்கிளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு வேலை முடிந்து அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அவினாசி அருகே உள்ள நாதம்பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோடு ஓரம் சரக்கு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.

    திடீரென மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் நிஷாந்த், கிருபாகரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.

    நிஷாந்த் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவர் பலியான தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சக்தி வேல், தாய் சுதா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் சோகத்துடன் தனது மகன் உடல் வைக்கப்பட்டுள்ள அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மனமுடைந்து காணப்பட்ட அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்தனர்.

    இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சக்திவேல், சுதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் மகனை பறி கொடுத்த பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    ×